உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போனால் 
மரத்து போனதாகிவிடும் மனம் 
மரம் கூட வெட்டுபட்டால்
பட்டு போய்விடும் 
மனம் வெட்டுப்பட்டால் 
பட்டு போகாமல் 
விட்டு கொடுத்து போ என்பது தான் 
பெண்மையின் உயர் குணம் 
ஆனால்  மரத்து போன பெண் மனதிற்கு 
பரிசானாலும் பழியானாலும் பாசமானாலும் 
வித்யாசம் இல்லை !!!
நீண்ட வருடங்களுக்கு பின் ஒரு கவிதை -- வித்யா 
 
